புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013

போலிசாரின் தடை உடைத்து ஓடும் வானில் பிரித்தானியப் பிரதமரிடம்! மகஜர் வழங்கிய அனந்தி..

யாழ். பொதுநூலகத்திற்கு முன்னால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து அதனை முன்னணியில் நின்று நடத்தியவர் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன்.

சர்வதேச ஊடகவியலாளர்களையும் பிரித்தானிய பிரதமரையும் மக்கள் நெருங்க விடாது சிறிலங்கா பொலிஸார் தடுத்து தாக்குதல் நடத்திய போதிலும் அந்த தடைகளை உடைத்து கொண்டு அனந்தி காணாமல் போனவர்கள் பற்றிய மகஜரை வழங்கினார்.
இதனை சர்வதேச ஊடகங்கள் தங்கள் கமராக்களில் பதிவு செய்து கொண்டன.
பொதுமக்களை தாக்குமாறு காவல்துறையினரை ஏவிவிட்டு சம்பந்தனும் விக்னேஸ்வரனும் தப்பி ஓடிய போதிலும் அனந்தி பாதிக்கப்பட்ட மக்களோ மக்களாக நின்று காவல்துறையினரின் தாக்குதலுக்கு இலக்காகிய போதிலும் துணிச்சலுடன் பொலிஸாரின் தடைகளை உடைத்துக் கொண்டு உரியவர்களிடம் மகஜர்களை கையளித்தார்.


ad

ad