புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2013

மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தமது காணிகளில் குடியேற சிலர் தடை விதிப்பதாகவும் தமது காணியில் குடியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து மண்முனைப்பற்றில் உள்ள சில முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள தமக்கு சொந்தமான காணிகளை பராமரிப்பதற்கு சிலர் தடைகளை ஏற்படுத்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பரீட் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன், இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் கூட்டத்துக்கு வந்தவர்களும் தடுக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராகவும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனுக்கு எதிராகவுகவும் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

ad

ad