புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி புதுவையில் பந்த் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர் தலைமையில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இன்று காலை 11 மணிக்கு புதுவை ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.

ரெயில் நிலையத்தில் புறப்பட தயாராக நின்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். போராட்டத்தில் பார்வர்ட் பிளாக் முத்து, லோக் ஜனசக்தி உதயகுமார், திராவிடர் விடுதலை கழகம் தந்தை பிரியன், அம்பேத்கார் தொண்டர்படை பாவாடைராயன், நான் தமிழர் கட்சி வேலுச்சாமி, தமிழர்களம் பிரகாஷ், தமிழர் தேசிய இயக்கம் தமிழ்மணி உள்பட ஏராளமானபேர் கலந்து கொண்டனர். அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
ரெயில் மறியல் போராட்டம் ½ மணி நேரம் நடைபெற்றது. ஒதியஞ்சாலை போலீசார் விரைந்து வந்தனர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்தனர்.

ad

ad