புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2013

ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் குறித்து காங்கிரஸ், பாஜகவுக்கு கடிதம்: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக 10 நாட்கள் அவகாசம் தேவை என ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் சனிக்கிழமை காலை துணைநிலை ஆளுநரை சந்தித்தப் பின்னர் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது,


காங்கிரஸ் கட்சி, பாஜகவுக்கு எதிராக தொடங்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி. அப்படியிருக்கும்போது ஆம் ஆத்மி கட்சி எப்படி காங்கிரஸ், பாஜகவிடம் ஆதரவு கேட்கும். எனவே ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் குறித்து காங்கிரஸ், பாஜகவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பாஜக, காங்கிரசிடம் இருந்து வரும் பதில் கடிதத்தை பொறுத்து முடிவு செய்யப்படும். ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் தொடர்பாக பாஜக, காங்கிரஸ் கருத்து தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ், பாஜக ஆகியவை மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. டெல்லியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் பாஜகவே காரணம் என்றார்

ad

ad