புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2013

திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த வாலிபர் கைது

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள ஜங்கமசமுத்திரம் கிராமம்,  செல்வநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி, பழனி இவரது மகள் செல்வி வயது-12, (இருவர் பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)
செல்வி தம்மம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.


நவம்பர், 25-ம் தேதி, காலை, 9 மணியளவில் பள்ளிக்குச் சென்ற செல்வி பின்னர் வீடு திரும்பவில்லை. செல்வியுடன் பள்ளிக்கு சென்ற மற்ற பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் சென்று பழனி மகளை தேடியும் அவர் எங்குமே கிடைக்கவில்லை.


இந்நிலையில், சிறுமியின் வீட்டின் அருகில் குடியிருந்து வரும், திருமணமான வாலிபர் குமார், வயது-23, என்பவர், சிறுமியை கடத்திச் சென்று, மும்பையில் உள்ள தனது சித்தியின் வீட்டில் தஞ்சம் புகுந்திருப்பது தெரியவந்தது.


இதைதொடர்ந்து, தம்மம்பட்டி போலீஸார் மும்பை சென்று செல்வியை மீட்டுவர நடவடிக்கை எடுத்தனர். போலீசார் மும்பை வருவதையறிந்த வாலிபர் குமார் செல்வியுடன் அங்கிருந்து, "தப்பித்து  ஆகி, நேற்று காலை, தம்மம்பட்டிக்கு வந்துள்ளார்.


இதுகுறித்து, தகவலறிந்த தம்மம்பட்டி போலீஸார், குமாரை பிடித்துச் சென்று  விசாரணை நடத்தினர், குமார் சிறுமி செல்விக்கு திருமண ஆசைக்காட்டி, பள்ளி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு கொண்டது  தெரியவந்தது. இதையடுத்து, குமார் மீது தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து, வாலிபர் குமாரை கைது செய்தார். பள்ளி சிறுமி செல்வியை சேலம் மகளிர் காப்பகத்தில், போலீஸார் ஒப்படைத்தனர்.

ad

ad