புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2013

கொழும்பில் அரைநிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
2014 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்படாததை கண்டித்து இன்று கொழும்பில் விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.
2014 வரவு செலவுத் திட்டம் ஏமாற்று திட்டம் எனவும் அதில் விவசாயிகளுக்கு எவ்விதமான நிவாரணங்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
கோவணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

ad

ad