புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2013




            ம்பள விஷயத்தில் "2சி' என்பதில் பட்டம் நடிகை ஸ்ட்ராங்காக நிற்பதை கடந்த இதழில் சொல்லியிருந்தோம். "வம்பு'க்காக அவரின் டாடி... போன்போட்டு பட்டத்திடம் பேசியபோதும் அதே பதில்தான் கிடைத்ததாம்! அதனால் "வேறு ஹீரோயின் வச்சுக்கலாம்' என டாடி சொல்ல... டைரக்டர் பாண்டியும் ஓ.கே. மனநிலையில் இருக்க... "வம்பு' மட்டும் "பட்டம் தான் வேணும்' என பிடிவாதமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது!

லயனுக்கு சீயான் என்றால் ஆகாது! அது சொந்த விவகாரம். இந்த கதைக்குத் தேவையில்லாத விவகாரமும்கூட!


கௌதமர் படத்தில் லயன் நடிக்க பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டிருந்தபோது "விருப்பமில்லேனா... சொல்லிடுங்க! சீயான் இந்த கதையைக் கேட்டு இம்ப்ரஸ் ஆகீருக்கார்!' எனச் சொன்னாராம் கௌதமர். இதனால்தான் காட்டமான அறிக்கைவிட்டு படத்திலிருந்து விலகினாராம் லயன்!

பெரிய இடத்து பேரனை வைத்து மௌனமாக குரு படம் எடுத்த சாந்த டைரக்டரை "காட்டன் வீரன்' ஹீரோவுக்கு படம் பண்ண அட்வான்ஸ் கொடுத்தது ஸ்டுடியோ பச்சை! சாந்தம் பக்காவாக கதை தயார் செய்துவிட்டார்! ஆனாலும் காட்டன் வீரனை வைத்து வேறு வேறு படம் பண்ணும் நிறுவனம் சாந்தத்தைக் கண்டுகொள்ளவில்லையாம்! இதனால் பொறுமையிழந்த சாந்தம் வெளியேற தருணம் பார்க்கிறாராம்!


மும்பையில் தொடங்கிய லயன் ஹீரோ படப்பிடிப்பிற்கு உடல்நிலை காரணமாக சமத்து ஹீரோயின் செல்ல முடியவில்லை! இதனால் மீண்டும் சமத்துக்கு ஸ்கின் பிராப்ளம்... என நியூஸ் கிளம்பியது! இதனால் "தொப்புள் சர்ச்சை' கிளப்பி "நய்யாண்டி' செய்த நாயகியிடம் கால்ஷூட் பேசப்பட்டதாம்! விஷயமறிந்த சமத்து, டைரக்டர் லிங்க கடவுளுக்கு போன்போட்டு "என்னை மாத்தினா ஒட்டுமொத்தமா இமேஜ் சரிஞ்சு... என்னை நோயாளி ஆக்கிடுவாங்க! ஹீட்டால் கொப்பளம் வந்து... இப்போ சரியாப்போச்சு! நான் நடிக்கிறேன்!' என கண்கலங்கப் பேசினாராம். இதையடுத்து தொப்புள் நடிகையிடம் நடத்திய பேச்சு வார்த்தையை ரத்து செய்து விட்டு "சமத்து தான் நாயகி' என்பதை அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்!

"வம்பு'வுடனான காதல் சர்ச்சையில் அப்செட் ஆனதால்தான் "கறிமாசாலா சாதம்' பட பிரஸ்மீட்டுக்கு அதன் நாயகி யான மொத் வரவில்லை... எனச் சொல்லப் படுகிறது!


பிரகாச இசையமைப்பு தயாரித்திருக்கும் "மதம்பிடிச்ச எலிபெண்ட் கும்பல்' படம் சூப்பராக வந்திருக்காம்! இந்தப் பட டைரக்டரை பலரும் மொய்க்க ஆரம்பிச்ச நிலை யில் "விஜய'மான பதியை வைத்து தொடர்ந்து படம் தயாரிக்கும் "சதீஷ' தயாரிப்பு... "பதி கால்ஷீட் ரெடி' என "எலிபெண்ட் கும்பல்' டைரக்டரிடம் அட்வான்ஸ் கொடுத்தாராம்! ஆனால் "பழைய கசப்பு' எதையோ மனதில் வைத்து "பதி வேண்டவே வேண்டாம்' என அடம் பண்ணீட்டாராம் மதம்!

கரகாட்ட கலைஞர்களை மையமாக வைத்து "ஐ ஆம் காட்' மில்க் டைரக்டர் படம் பண்ணவிருக்கிறார்! 

இந்நிலையில் இதே கதைக்களத்தில் "வாட்டர் பறவை' டைரக்டரான "ஸீன்'சாமி ஒரு ஸ்கிரிப்டை இயக்க இமயத்திடம் கொடுத்தாராம். 

அதைப் படம் பண்ண இமயமும் தயாராக... விஷயமறிந்த மில்க் டைரக்டர் தனது பட "செழி'ப்பான கேமராமேன் மூலம் ஸீன்சாமியிடம் பேசினாராம்! "நீங்க இமயத்துகிட்டதான் பேசணும்' என ஸீனு சொல்ல... மில்க் இப்போது இமயத்திடம் பேசியிருப்பதாக தகவல்கள் வருது!

"ஆடுவதற்கு களம்' அமைத்த படம் தந்து சில வருடங்கள் ஓடிவிட்டது! ஆனால் அடுத்த பட கதையை ரெடி செய்யாமல் இருக்காராம் "சக்ஸஸ்' டைரக்டர்!

சக்ஸஸும் மதுரைப் புள்ளி மகனான "தயா'வின் நிதியில் வம்புவை வைத்து தொடங்கவிருந்த படம் அப்படியே நின்றது! அதன் பிறகு "கொல வெறி'யை ஹீரோவாகப் பேசி... முடித்தார்கள்!


ஆனால் ஸ்கிரிப்டை இன்னும் சக்ஸஸ் ரெடி செய்யாமல் சில படங்களை ஃபர்ஸ்ட் காப்பி தயாரிப்பாளராக தயாரித்துவருகிறார். இதனால் தயா தரப்பிற்கு சலிப்பாகி... வடையைப் போட்டு கறி செய்துவருகிறார்!

திறமையான டைரக்டர் சக்ஸஸ் ஸ்கிரிப்டை முடிக் காமல் இருக்க என்ன காரணம்? என ஏரியாவில் விசாரித்தபோது... "மத எலிபெண்ட் கும்பல்' டைரக்டரான விக்ரமான குமாரர்... சக்ஸஸுக்கு உதவியாளராக இருந்து 

விஷயதானம் செய்தாராம். அவர் தனியே டைரக்டராகி விட்டதால் சக்ஸஸ்... ஸ்கிரிப்ட்எனும் சர்க்கஸில் திண்டாடுவதாகச் சொல்றாங்க!

ad

ad