புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2013

பிறந்த 4 நாளில் பெண் குழந்தை கடலில் வீச்சு: சென்னையில் கொடூரம்
சென்னை காசிமேடு பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலையில் சில மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடலில் ஒரு பச்சிளம் குழந்தையின் பிணம் மிதப்பதை கண்டனர்.


இதுதொடர்பாக செல்போன் மூலம் மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் அந்த குழந்தையை போலீசார் தேடினர்.
அந்த குழந்தையின் உடல் கடல் அலையில் அங்கும் இங்கும் அசைந்து, கடற்கரையோரம் கொட்டப்பட்டுள்ள பாறைகளுக்கு மத்தியில் வந்து சேர்ந்தது. 
அந்த உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குழந்தையின் தாய் யார் என்று தேடி வருகின்றனர்.
கண்டெடுக்கப்பட்ட குழந்தை பெண் குழந்தையாகும். பிறந்து 4 நாள்கள் தான் ஆகியிருக்கும் என்று கூறப்படுகிறது. 
பெண் குழந்தை பிறந்துவிட்டதே என்று பெற்றோரே அந்த குழந்தையை கடலில் தூக்கி வீசினார்களா? வறுமையின் காரணமாக இந்த செயலில் குழந்தையின் தாய் செயல்பட்டாரா? அல்லது தகாத முறையில் பிறந்ததால் இந்த செயலில் அந்த தாய் ஈடுபட்டரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பச்சிளம் குழந்தை கடலில் வீசப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad