புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2013

பொது இடத்தில் நிர்வாணமாக நின்று திருமணம் செய்துகொண்ட காதலர்கள்

ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் நிர்வாணமாக சுற்றுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நிர்வாண சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அங்கு நிர்வாண கிளப்பில் உறுப்பினராக உள்ள ஸிப்சி தவுப்
என்ற பெண்ணுக்கும் ஜேம்ஸ் சுமித் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் தங்களது கொள்கைகளை வலியுறுத்தி பொது இடத்தில் நிர்வாணமாக நின்று திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்கள் தங்களது ஆதரவாளர்களோடு திருமண உடையில் நகரின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றனர். பின்னர் தங்களது ஆடைகளை களைந்து நிர்வாண கோலத்தில் நின்றனர்.


அவர்களுடன் வந்தவர்களும் அவ்வாறு செய்தனர். பொது இடத்தில் அவர்கள் நிர்வாணமாக நின்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருவரும் திருமண சம்பிரதாயங்களை முடித்து நிர்வாண நிலையிலேயே ஒருவரையொருவர் கட்டித் தழுவி கொண்டனர்.  அவர்கள் அப்போது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவல் அறிந்துவந்த போலீசார் அவர்களை துணியை கொண்டு மூடினர். பின்னர் இருவரையும் கைது செய்து சிறை

ad

ad