இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் பதவிக்கான தேர்வில் இங்கி லாந்து அணியின் முன்னாள் வீரர் போல் பார் ப்ராஸும் இணைக்கப்பட்டுள்ளார்.
புதிய பயிற்றுவிப்பாளர் தேர்வு தொடர்வில் நியமிக்கப்பட்டிருந்த குழுவே அவரை இப்பதவிக்கு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ள கிரஹம் போர்ட் அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் பயிற்றுவிப்பாளர் பதவி யிலிருந்து விலகவுள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளராக இரு வருட கால ங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர் அப்பதவிக்காலம் நிறைவுக்கு வரும் நிலை யிலேயே பதவியிலி ருந்து விலகவுள்ளார்.
இந்நிலையில் புதிய பயிற்றுவிப் பாளரு க்கான இறுதித் தேர்வில் மாவன் அத்த ப்பத்து மற்றும் மார்க் டேவிஸ் ஆகியோர் உள்ள நிலையில் தற்போது போல் பார் ப்ராஸும் பரிசீலிக்கப்படவுள்ளார்.
இவருக்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெறவுள்ளது.