மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 26வது நினைவு தினம் இன்று. சென்னை மெரினா கடற் கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நடந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக கழக நிர்வாகிகளும், பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட னர்.