புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2013


அதிமுகவை எதிர்த்து பலமான கூட்டணி அமைப்பேன்:
விஜயகாந்த் பேச்சு
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் பட்டது. விழாவில் சிறுபான்மையினர் நிறுவன தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம்,
எம்.எல்.ஏ.க்கள், பார்த்தசாரதி, சந்திரகுமார் முதலானோர் பங்கேற்றனர்.  இதில், கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு ஏழைகளுக்கு பிரியாணி மற்றும் கேக் வழங்கி சிறப்புரையாற்றினார்.


அப்போது அவர்,  ‘’தே.மு.தி.க.வில் மரங்கள் பட்டுபோய் விட்டதாக மற்றவர்கள் குறை சொல்கிறார்கள். பட்டுபோன மரங்கள் தான் மீண்டும் துளிர்க்கும். அது போல தான் தே.மு.தி.மு.க. மீண்டும் துளிர் விடப் போகிறது. கட்சியில் இருந்து போனவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.
இங்கு பேசிய பேராயர் எஸ்ரா சற்குணம் நீங்கள் கேப்டனாக இருக்கிறீர்கள். உங்களுக்கு இன்னொரு கேப்டன் தேவைப்படுகிறது. ஒரு விமானத்தில் 2 கேப்டன்கள் இருப்பார்கள். ஒரு கேப்டனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டால் இன்னொரு கேப்டன் தான் காப்பாற்றுவார். எனவே இன்னொரு கேப்டன் சேர்த்து கொள்வது தவறு இல்லை என்றார். அதனால் நான் அவரது கருத்தை பரிசீலித்து முடிவெடுப்பேன்.
பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டாம் என எஸ்றா சற்குணம் கேட்டுக் கொண்டார். அதை நான் கண்டிப்பாக பரிசீலிப்பேன்.  வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை எதிர்த்து பலமான கூட்டணி அமைப்பேன்’ ’என்று தெரிவித்தார்.

ad

ad