புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013

கதவை வெளியில் பூட்டியதால் தூக்கில் தொங்கிய கள்ளக்காதலர்கள்!

சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதல் ஜோடியினை வீட்டுக்குள் வைத்து பூட்டியதால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் மாவட்டம், சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி மணிமேகலை(30). இந்தத் தம்பதிக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உண்டு.
இந்நிலையில் மணிமேகலை தனது தாய் வீட்டுக்கு அருகே வசித்து வந்த 27 வயதான அருள் என்ற நபருடன் கள்ளக்காதலில் வீழந்தார்.
பல காலமாக இது நீடித்துள்ளது. அருளுக்கும் திருமணமாகி, மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுற்றம், குடும்பம், குழந்தைகள் என அனைவரையும் மறந்து விட்டு இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமா இருந்துள்ளனர்.
அடிக்கடி மணிமேகலையைத் தேடி அவரது வீட்டுக்கே வந்து ஜாலியாக இருந்துள்ளார் அருள். இதனால் அக்கம்பக்கத்தில் மக்கள் அறுவெறுப்படைந்தனர்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மணிமேகலையைத் தேடி வீட்டுக்கு வந்துள்ளார் அருள். இருவரும் வீட்டுக்குள் கதவைப் பூட்டிக் கொண்டு வேலையை ஆரம்பித்தனர். இதை அறிந்த அக்கம் பக்கத்து பெண்கள் ஒன்று திரண்டு, வந்து மணிமேகலை வீட்டின் கதவை வெளியிலிருந்து பூட்டியுள்ளனர்.
கதவை வெளியிலிருந்து பூட்டியதால் மணிமேகலை அதிர்ச்சியும், அவமானமும் அடைந்தார். அருளும் செய்வதறியாமல் திகைத்தார்.
இதையடுத்து இருவரும் சேலையை எடுத்து தூக்குப் போட்டு மாட்டிக் கொண்டனர். இருவரும் தூக்கு மாட்டிக் கொண்டதையடுத்து அக்கம் பக்கத்தினர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மணிமேகலை உயிரிழந்தார். அருள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ad

ad