புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2013

கிளி.மாவட்டத்தில் ஒரு வயதிலேயே அன்னையை இழந்த  பிரதா தெய்வேந்திரம்பிள்ளை சாதனை
news
கிளிநொச்சி மாவட்டத்தில் க. பொ. த உயர்தரப் பரீட்சையில் பிரதா தெய்வேந்திரம்பிள்ளை என்ற மாணவி மாவட்ட ரீதியாக முதலிடத்தை பிடித்துள்ளார்.

2013ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தி
யாலைய மாணவி பிரதா வர்த்தகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவருக்கு ஒருவயது இருக்கும் போதே தாயார்  இறந்து விட சிறியதாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் கற்க முடியாத சூழ்நிலையில் இடை நிறுத்தப் பட்டது. இதனால் இவர் அந்த ஆண்டிற்குரிய பத்தாம் தரத்தினை படிக்க முடியாமலே போய் விட்டது.

இருந்தும் மனம் தளராது பல துன்பங்களுக்கு மத்தியில் இலட்சியக் கனவுகளோடு தவற விட்ட ஆண்டினையும் சேர்த்து பதினோராம் தரத்தில் கற்று சாதாரண தரத்தில் சித்தியெய்திய இவர் மேலும் தனது விடா முயற்சியினால் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.

அதன்படி

புள்ளி விபரவியல் – A

கணக்கீடு – A

பொருளியல் – B பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad