புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2013

சுவிசில் நடைபெற்ற அன்ரன் பாலசிங்கம் மற்றும் சு.ப.தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு கடந்த 14ம் திகதி சனிக்கிழமை செங்காலன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வானது, பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
செங்காலன் வாழ் தமிழ்மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வானது மிகவும் உணர்வுபூர்வமாகவும் நம்பிக்கையை தந்த எழுச்சி நிகழ்வாகவும் இருந்தது.
மாவீர வித்துக்களான அரசியல் பெருந்தகைகளின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், மற்றும் சிறப்பு பேச்சோடு கவிதையும் இடம்பெற்றது.
அத்துடன் காலத்தின் தேவை கருதிய பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் மற்றும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுகள் சுமந்த காணொளி காட்சி தொகுப்புகளும் அகண்ட திரையில் காண்பிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

ad

ad