ஏடி.எம். மையத்தில் பெண் அதிகாரியை வெட்டியவர் அடையாளம் தெரிந்தது
பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் அதிகாரியை மர்ம ஆசாமி அரிவாளால் வெட்டி பணம், செல்போன், கிரெடிட் கார்டுகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தி இருந்தது. அந்த மர்ம ஆசாமியை கர்நாடக போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த நபர் ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நாராயணன் ரெட்டி என்பது தெரிய வந்தது. தலைமறைவாகி இருக்கும் அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.