நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி நேற்று கொட்டும் மழையில் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டதுடன் மனித உரிமை ஆணையாளருக்கும்
மகஜர் ஒன்றினை அனு ப்பி வைத்துள்ளனர்.இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய யாழ்.போதனா வைத்தியசாலை யின் பிரதிப் பணிப்பாளர், கல்வித் தகைமையுடைய அனைவருக்கும் 2 வாரத்திற்குள் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் எனவும் இதற்கான அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சகல சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி க்கை விடுத்ததுடன் யாழ்.மாவட்ட செயலகத்திற்குச் சென்று அரசாங்க அதிபருக்கான மகஜரைக் கையளித்ததுடன் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளருக்கான மகஜரையும் கையளித்துள்ள னர்.
அம்மகஜரில், யாழ்.போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக சேவை புரியும்
எம்மில் பலர் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாகவே சேவையாற்றுகின்றோம்.
எம்மில் பலர் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாகவே சேவையாற்றுகின்றோம்.
எமது சேவைக் காலத்தின் போது எம்முடன் சேவை புரிந்த தொண்டர்களை சுகாதார அமைச்சு சுகாதார சுத்திகரிப்பாளர் பதவிக்கு தரம் 8 தகைமையுடன் உள்வாங்கியது போல் நாம் அனைவரும் உள்வாங்க ப்படுவோம் என்ற பெருத்த நம்பிக்கையு டனும் எதிர்பார்ப்புடனும் கடமைக்கு வருகின்றோம்.
எமக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் வெறும் 175 ரூபா கொடுப்பனவுடடனும் பொருளாதாரக் கஷ்டத்துடன் சேவையில் ஈடுபட்டு வருகின்றோம். இக்கொடுப்பனவானது எமது போக்குவரத்து, உணவு, சீருடை செலவுக்கே போதாத நிலையில் நாம் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழு ள்ள எமது குடும்பங்களிலிருந்தே பணம் பெற்று எமது பொருளாதாரத் தேவைகள் அனைத்தையும் ஈடுசெய்து வருவதைப் பலரும் அறிவார்கள்.
இவ் வைத்தியசாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பல வருடங்களாக லிப்ற் பாவனையில் இல்லாத வேளையில் எமது தொண்டர்கள் நோயாளர்களை மேல்மாடி விடுதிகளிலிருந்து கீழும் கீழிருந்து மேல்மாடி விடுதிகளுக்கும் காவிச் சென்று சேவை புரிந்தமையானது நோயாளர்களும் அவர்க ளின் உறவினர்களும் வைத்திய சாலை ஊழியர்களும் அறிந்த விடயமே. இத்தகைய எமது சேவையை பத்திரிகைகளும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வைத்தியசாலை நிரந்தர சிற்றூழியர் கடமைக்கு வராதவேளை பகற்சேவையில் உள்ள தொண்டர்களை இரவும், இரவுச் சேவையில் உள்ள தொண்டர்களை வற்புறுத்தி மறிப்பது வழமை.
அதன் போது வைத்தியசாலை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்ற காரணத்திற்காக எம்மில் பலர் நெருங்கிய உறவினர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் கூட பங்கு பற்றாமல் விடுவதுண்டு. அத்து டன் சகலருக்கும் உள்ள உரிமையான கிழமையில் ஒருநாள் விடுமுறை கூட நாம் எடுப்பதில்லை. அதுகூட சில சந்தர்ப்பங்களில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் மறுக்கப்படுவதுண்டு.
இந்த நிலையில் ஒருநாள் அவகாச அறிவித்தலுடன் கடந்த 26.10.2013 அன்று நாம் அனைவரும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தோம். நேர்முகப் பரீட்சைக்காக நாம் சென்ற வேளை அங்கு வெளியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளும் நேர்முகப் பரீட்சைக்காக வருகை தந்திருந்ததை அவதானித்தோம். இங்குகூட எமக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நாம் அழைக்கப்படாமையையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
மேலும் அங்கு நேர்முகப் பரீட்சையில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் இரண்டு பாடங்களில் திறமைச்சித்தியுடன் 6 பாடங்கள் சித்தியெய்தியும் கோரப்படுவதாகவும் அறிந்தோம்.
இத்தகைமைக் கோரிக்கையை எம்மைப் புறக்கணித்து வெளியில் இருந்து நேர்முகப் பரீட்சைக்கு வந்தோருக்கு நியமனம் வழங்குவதற்கான ஒரு முயற்சியாகவே நாம் எண்ணுகிறோம்.
இப்பதவிக்கு க.பொ.த. சதாரணதரச் சித்தி கோரப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையுண்டா என்பதையும் அறிய விரும்புகின்றோம். ஆகையினால் இவ்விடயத்தில் தாங்க ளும் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகமும் தலையிட்டு எமது கடந்த கால சேவையினை கவனத்தில் கொண்டு எம் அனைவருக்கும் சுகாதார சுத்திகரிப்பாளர் நியமனம் கிடைக்க ஆவன செய்யும்படியும் தயவுடன் கேட்டுக்கொள்வதுடன் எமக்கு நியமனம் வழங்கப்பட்ட பின்பு மிகுதியாக உள்ள வெற்றிடங்களுக்கு வெளியார் நிய மிக்கப்படுவதில் எமக்கு எவ்வித ஆட்சேப னையும் இல்லை என்பதனையும் தெரிவித் துக் கொள்கின்றோம் என்றுள்ளது.