புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2013

நெடுந்தீவு பிரதேச சபை தலைவரை கொலை செய்ய பணித்தது அவரது மனைவியே! விசாரணையில் அம்பலம பரபரப்பு தகவல்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் (ரஜீவ்) கொலை தொடர்பில், அவரது மனைவியும் மற்றுமொரு நபரும் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடந்த 27 ம் திகதி புங்குடுதீவில் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் (ரஜீவ்) சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இக்கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஈபிடிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான கந்தசாமி கமலேந்திரன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று காலையில், இவர்கள் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்ப பிரச்சினை மற்றும் கள்ளத்தொடர்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் நெடுந்தீவுப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏற்கனவே கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரை கொலை செய்ய பணித்தது அவரது மனைவியே! பரபரப்பு தகவல்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை செய்யுமாறு பணித்தது அவருடைய மனைவியே என பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
கொலை குறித்து விசாரணை நடத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.
தனது கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முன்னர் அவரது மனைவி பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
ஆனால் தனது கணவனை கொலை செய்யுமாறு அவர் பணிப்பு விடுத்ததை அடுத்து வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரும் ஈபிடிபி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் லண்டன் சசிந்திரன் ஆகியோர் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 09அஅ வர்க்க துப்பாக்கியும் 11 ரவைகளும் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரும் ஈபிடிபி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் மனைவியான றெக்சியன் அனிதாவிற்கும் இடையில் கள்ளத் தொடர்பு காணப்பட்டுள்ளதாகவும் அதன் விளைவாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸாருக்கு பொய் தகவல் வழங்கிய நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் மனைவியான றெக்சியன் அனிதாவிடம் குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணை மூலம் அனைத்து உண்மைத் தகவல்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

ad

ad