புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2013

நெல்சனே மீண்டும் பிறந்துவா தமிழனுக்காய்!-அ .பகீரதன் 

கருப்புச் சிங்கமொன்று-இன்று
காரிருளில் ஒளியுதடா
காலமெனும் படகேறி
கைகாட்டி மறையுதடா

நெல்சனெனும் பெயர்கேட்டால்
கல்மனசும் கரையுமப்பா
வெள்ளையனின் பள்ளியிலே-அது
அவன்பெற்ற பெயரப்பா



சட்டம் படித்ததனால்-வெள்ளையனின்
சட்டையை பிடித்தானப்பா
சட்டையைப் பிடித்ததனால்-சிறைச்
சட்டம்தான் கிடைத்ததப்பா

கருங்காலித் தடியொன்று
பெருங்காலம் சிறைகிடந்து
பெருங்குடல் சுருங்காமல்
வெளிவந்து ஒளிதந்த கதையப்பா

பெருங்காலம் சிறைகிடந்தும்
அவனுடலுக்கிப் போகாமல்
அதுதாங்க முடியாமல்
அறைக்கம்பி தானுக்கிப்போன கதையப்பா

குருவி குளிக்கும் குளமென்று
காகத்திற்கு தடைவிதித்த கதையப்பா-அங்கு
சிறுஅறிவாளிச் சமூகமொன்று
பெருவாரிச்சனத்தை இரையாக்கிக்கொண்ட கதையப்பா

தடைவிதித்த அரசெல்லாம் பின்னாளில்
அவருக்கு குடைபிடித்த கதையப்பா
”ராஷ்கல்” என்ற நாவெல்லாம் பின்னாளில்
நோபல் பரிசுகொடுத்த கதையப்பா

சொல்லச் சொல்ல இனிக்குமடா
அவன் கதை-ஆனாலும்
நீளமாய்ப் போனால்
கவி உனக்கு கசக்குமடாதம்பி

நெல்சனே மீண்டும் பிறந்துவா தமிழனுக்காய்!

நன்றி
நட்புடன்,
அ.பகீரதன்

ad

ad