புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

€€€
மன்னார் மனித புதைகுழிகள் பற்றி அனைத்துலக விசாரணை வேண்டும் -மன்னார் ஆயர் கோரிக்கை

மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

திருக்கேதீஸ்வரம் பகுதியில், நீர் விநியோக குழாய் பதிப்பதற்காக குழி தோண்டிய போது, கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் புதைகுழி கண்டுபிக்கப்பட்டது.

இதையடுத்து மன்னார் நீதிவான் முன்னிலையில் அந்தப் பகுதியைத் தோண்டிய போது, இதுவரை 10 மனித சடல எச்சங்களும், மண்டையோடுகளும் மீட்கப்பட்டன.

மீண்டும் இந்தப் பகுதியில் வரும் சனிக்கிழமை தோண்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை, இந்தப் புதைகுழிப் பகுதியை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு சிறிலங்கா காவல்துறைக்கு மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மன்னார் ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை, இந்தப் புதைகுழி தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இவை போர் காலத்தில் காணாமற்போன பொதுமக்களுடையவையாக இருக்கலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் காணாமற்போனவர்கள் குறித்து எந்த முறையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்தப் புதைகுழி வடக்கில் காணாமற்போனவர்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைக்கான கண்களைத் திறக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad