புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2014

இலங்கை சிறையில் விடுவிக்கப்பட்ட 70 மீனவர்கள் காரைக்கால் வந்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 12 விசைப்படகுகளில் 51 மீனவர்களும், ராமநாத புரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் மண்டபத்திலிருந்து 3 விசைப்படகுகளில் 19 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.


இலங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர் முயற்சிகளின் காரணமாக 70 மீனவர்களும், 15 விசைப்படகுகளுடன் சில தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டனர்.


விடுதலையான அவர்கள்  காரைக்கால் மார்க் துறைமுகத்தை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ad

ad