புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2014


பிரபாகரனுக்கும் வேலுநாச்சியாருக்கும்19 ஒற்றுமைகள் உள்ளன : வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவரது சொந்த ஊரான, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கலிங்கப்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த 4 நாட்களாக பங்கேற்று வந்தார்.


 வைகோவின் சார்பில், வீரத்தாயார் வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு பற்றிய நாட்டிய நாடகம் நடைபெற்றது.  வைகோ தலைமை தாங்கி, நாடகத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வைகோ பேசியபோது,   ‘’சிறுவயதிலேயே ‘கடமை‘ என்ற நாடகத்தில் கதாநாயகனாகவும், ‘வீரமுழக்கம்‘ நாடகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாகவும், மற்றொரு நாடகத்தில் சாம்ராட் அசோகராகவும் வேடம் ஏற்று நடித்தேன்.
அப்போது திருவள்ளுவர் உருவ படத்தை தத்ரூபமாக வேணுகோபால் சர்மா ஓவியமாக வரைந்து, முதலமைச்சராக இருந்த பக்தவச்சலத்திடம் அளித்தார். அப்படிப்பட்ட வேணுகோபாலின் மகனான ஸ்ரீராம் சர்மாதான், தற்போது நடைபெறும் வீரமங்கை வேலுநாச்சியார் நாடகத்தை நடத்துகிறார். 
இலங்கை தமிழர்கள் தங்கள் குழந்தைகளுடன் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். அந்த போருக்கு இலங்கைக்கு இந்தியா பெருமளவு உதவியது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும், வேலுநாச்சியாருக்கும் 19 ஒற்றுமைகள் உள்ளன. வேலுநாச்சியார் 8 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து, பின்னர் வெள்ளையரிடம் இருந்து சிவகங்கையை மீட்டார். அதே போல் பிரபாகரனும் மீண்டும் வருவார். ராஜபக்சே கூட்டத்திடம் இருந்து இலங்கையை மீட்பார்.
மக்கள் மன்றத்தில் ஒரு கூண்டில் ஈழத் தமிழர்களும், குற்றவாளி கூண்டில் அவர்களை கொல்ல ஏவிய கூட்டமும் நிற்கும். அந்த காலம் விரைவில் வரும். இங்கே நடைபெறும் நாடகம் அரசியலுக்கானது அல்ல. வீரம் செறிந்த மண்ணில், வீரத்தாயின் நாடகத்தை நடத்த வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறி இருக்கிறது.
எந்த கூட்டணியில் ம.தி.மு.க. இருந்தாலும், சிறுபான்மை மக்களுக்கு நானும், கட்சியும் பாதுகாவலாக இருப்போம்’’என்று தெரிவித்தார்.

ad

ad