புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

31ந் தேதி ரகசியம் : மதுரையில் அழகிரி பரபரப்பு பேட்டி
 



31ந்தேதி ரகசியம் வெளியிடப்போவதாக கூறி,  பரபரப்பை ஏற்படுத்தினார் மு.க.அழகிரி.
 திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.  கட்சியிலிருந்து
நீக்கப்பட்ட அழகிரி, தொடர்ந்து சென்னையில் தங்கியி ருந்தார்.


வரும் 30ம் தேதி தனது பிறந்த நாள் மதுரையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருப்பதால், இன்று சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டார் அழகிரி.   சென்னை விமான நிலையத்தில் அவருக்கு மேள தாளத்துடன் வழியனுப்பு விழா நடைபெற்றது.  அப்போது,  திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் அங்கு வந்து, அழகிரியை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் நடைபெற்றது.  இந்த சந்திப்பில் இருவரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
துரைமுருகனுடனான சந்திப்பு, அழகிரியின் உஷ்ணத்தை குறைக்குமா? அல்லது தனிக்கட்சி தொங்கும் திட்டத்தை தீவிரப்படுத்துவாரா அழகிரி என்று பரபரப்பு கிளம்பியது.
இந்நிலையில் மதுரை விமான நிலையம் சென்ற அழகிரி ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.  வழக்கத்திற்கு மாறாக, ஆதரவாளர்களைப்பார்த்து உற்சாகமாக கைய சைத்து சென்றார் அழகிரி.
அப்போது அவரை, செய்தியாளர்கள் மடக்கி, மடக்கி கேள்வி எழுப்பினர்.

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் குவிந்திருக்கிறார்களே?
அவர்களுக்கு என் நன்றி.
பிறந்த நாள் நடைபெறுமா?
வழக்கம் போல் இந்த வருடமும் என் பிறந்தநாள் விழா நடைபெறும்.  வழக்கம்போலவே இந்த  வருடமும்,  பிறந்த நாள் விழாவில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பெறும். 
31ந் தேதி ஏதோ ரகசியம் வெளியிடப்போவதாக சொல்லபடுகிறதே?

30ம் தேதி என் பிறந்தநாள் விழா முடிவடைந்ததும், 31ம் தேதி என் மனதை திறந்து பேசப்போகிறேன்.  அதுவரை அந்த ரகசியம் ரகசியமாகவே வைக்கப்படும்.

-அழகிரியின் இந்த சஸ்பென்ஸ் பேச்சு, திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

ad

ad