புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2014

ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்தது
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாதக்  கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா 3வது தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் இதுபற்றி தமக்குத் தெரியப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3வது தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக, அமெரிக்கத் தூதுவர் சிசன், இம்மாதம் முதல் வாரத்தில் தமக்குத் தெரியப்படுத்தி விட்டதாகவும் அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.
இதனையடுத்தே,  இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் தமக்கு ஆதரவு தேடும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

ad

ad