புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

 45 நாட்களுக்குள் இத்தாலிக்கு அனுப்புவதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் இந்த மோசடி நடவடிக்கை
இத்தாலிக்கு தொழில் வாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி, நிதி மோசடி செய்யப்பட்டமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏராளமானவர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் உட்பட ஜா-எல, வத்தளை, பொரளை, மினுவாங்கொடை, அம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் இவ்வாறான நிதிமோசடிகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியான ஆவணங்கள் முன்வைக்கப்பட்டு 45 நாட்களுக்குள் இத்தாலிக்கு அனுப்புவதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சில தரப்பினரிடம் 20 லட்சம் ரூபா வரையில் மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமது பிரதேசங்களில் உள்ள காவல்நிலையங்களில் முறையிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த மோசடி குழு ஜா-எல – துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, மலேசியாவுக்கு தொழில்வாய்ப்பிற்காக செல்லும் அனைத்து இலங்கையர்களிடமும் தொழில் ஒப்பந்தம் மற்றும் மலேசிய அரசின் தொழில் வீசா அனுமதிப் பத்திரம் என்பன இருக்க வேண்டியது அவசியம் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சில தரப்பினர் போலியான தகவல்களை வழங்கி மோசடியான வகையில் மலேசியாவுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுச் செல்வதாக பணியகத்தின் பிரதி முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.

ad

ad