புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2014

ஏமாற்றப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் : விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பி வைப்பு

தமக்கு வழங்கப்பட்டது போலி விமான பயணச் சீட்டு எனத் தெரியாது சபரிமலை யாத்திரைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 55 யாதிரிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
 
விமான நிலையத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த யாத்திரிகர்களிடம் வழங்கப்பட்டது போலி பயணச் சீட்டு என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்து அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 
 
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் 55 பேரும் விமான பயணச் சீட்டு வழங்கிய முகவருக்கு எதிராக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
 
போலி விமான பயணச் சீட்டுக்களை வழங்கி  சபரிமலை யாத்திரிகர்களை ஏமாற்றிய நபர்களை பொலிஸார் தேடி வருவதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ad

ad