புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2014

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள்போட்டியின்றி தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 18 எம்.பி.க்களில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7–ந்தேதி தேர்தல் நடத்தப்படும்
என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.


இதையடுத்து மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 21–ந்தேதி தொடங்கியது. முதல் நாளே தி.மு.க. வேட்பாளர் திருச்சி சிவா வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் அ.தி.மு.க. சார்பில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே. ரெங்கராஜன் மற்றும் 2 சுயேட்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது, சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.


மனுக்களை வாபஸ் பெறுவதற்கான நேரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது. எனவே, களத்தில் இருந்த 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் இன்று முறைப்படி அறிவித்தார். இந்த எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்குகிறது.

ad

ad