மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் வாக்களிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு
மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேரும் வாக்களிக்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேமுதிகவைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ஒரு கட்சியின் சார்பாக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர், மற்றொரு கட்சிக்கு வாக்களிப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே தேமுதிகவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் மாநிலங்களவைத் தேர்த-ல் வாக்களிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து வரும் வியாழக்கிழமை அன்று உச்சநீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது.