புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2014

நியூசி.யுடன் கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி

நியூசிலாந்துடன் இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டிகளில் 3 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது.  3வது ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.
இதனைதொடர்நது 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி. இன்று வெலிங்டனில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் மட்டும் எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம்  ஒருநாள் போட்டி தொடரை 4-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து அணி வென்றுள்ளது.

ad

ad