புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2014

சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் ஜோன் அமரதுங்க. சமல் பிரதமராகிறார்
இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையில் சபாநாயகராக இருக்கும் ஜனாதிபதியின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச பிரதமராக
நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரதமர் டி எம் ஜெயரட்ன, பதவி விலகவுள்ளதாக வெளியான தகவல்களின் பின்னரே இந்த தகவல்கள வெளியாகியுள்ளன.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவும் ஜனாதிபதியுடன் தற்போது மத்திய கிழக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
எனினும் இந்த பயணத்துக்காக அவர் கட்சியின் அங்கீகாரத்தை பெற்றுள்ளார் என்று கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களுக்காக அதிக செலவுகளை மேற்கொள்கிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் ஜோன் அமரதுங்கவும் அவருடன் சென்றுள்ளமை குறித்து கேட்டபோது இது தொடர்பில் கட்சி தமது நிலைப்பாட்டை பின்னர் வெளியிடும் என்று கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.

ad

ad