புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2014


மூத்த தமிழ்அறிஞர்களுக்கு முதல்வர் விருது வழங்குவார்: தமிழக அரசு

தமிழுக்கு தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப்பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றிட தகுதியான பெருமக்களை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

அதன்படி, திருவள்ளுவர் விருது - கவிஞர் யூசி (தைவான்)–க்கும்; தந்தை பெரியார் விருது – சுலோச்சனா சம்பத்; அண்ணல் அம்பேத்கர் விருது – பேராயர் எம்.பிரகாஷ்; பேரறிஞர் அண்ணா விருது – பண்ருட்டி ச.ராமச்சந்திரன்; பெருந்தலைவர் காமராசர் விருது - கி.அய்யாறு வாண்டையார்;

மகாகவி பாரதியார் விருது – கு.ஞானசம்பந்தன்; பாவேந்தர் பாரதிதாசன் விருது – ராதா செல்லப்பன்; தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – அசோகமித்ரன்; முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – வ. ஜெயதேவன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

மேற்காணும் விருதுகளை நாளை (15–ந்தேதி) சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஜனவரி 26 ஆம் தலைமை செயலகத்தில் நடைபெறும் விழாவில்  தமிழக முதல்வர் ஜெயலலிதாவே விருதுகளை வழங்குவார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல் அமைச்சரிடம் விருது பெற தமிழறிஞர்கள் விருப்பம் தெரிவித்ததால் ஜெயலலிதாவே வழங்குவதாகவும் தமிழ அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. திருவள்ளுவர் விருது பெறும் தைவான் நாட்டை சேர்ந்ந்த கவிஞர் யுசி, நாளை நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்குகிறார்.

ad

ad