புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2014

தலையில் கல்லை போட்டு கணவர் கொலை! கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் மனைவி ஆத்திரம்!
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள முஸ்திகிரிஅள்ளியை சேர்ந்தவர் குப்பாகவுண்டர். இவரது மகன் சின்னசாமி (50). இவருக்கு திருமணமாகி லட்சுமி (42) என்ற மனைவியும், மகன்கள்
மற்றும் மகள்கள் உள்ளனர்.

சின்னசாமிக்கும், அதேபகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை கைவிடுமாறு மனைவி லட்சுமி, கணவரிடம் கூறியுள்ளார். இருப்பினும் சின்னசாமி கள்ளத்தொடர்பை கைவிட மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சின்னசாமி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல கடந்த செவ்வாய்க்கிழமையும் சின்னசாமி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் போதையில் வீட்டில் படுத்துக் கொண்டார்.
கணவரின் தொல்லை தாங்கமுடியாமல் மனமுடைந்த லட்சுமி, போதையில் வீட்டில் படுத்திருந்த சின்னசாமியின் தலை மீது கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 
பின்னர் லட்சுமி அங்கிருந்து சென்று மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது கணவர் வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டு தன்னிடம் தகராறு செய்து வந்ததால் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர்.
கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியே கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ad

ad