புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

அண்ணா பிறந்த மண்ணில் உறுதியுடன் கூறுகிறேன் : வைகோ 
காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் காஞ்சீ புரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றுப்பேசினார்.



அவர்,   ‘’ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ள காங்கிரஸ் அரசு அகற்றப்பட வேண்டும். 1967–க்கு பிறகு எப்படி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் போனதோ அதேபோல் தற்போதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல் போக வேண்டும்.  குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமுலில் உள்ளது. ஆனால் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதேபோன்று மதுவிலக்கு அமல்படுத்தும் வரை ம.தி.மு.க. போராடும்.
மதவாத கட்சி என்று பா.ஜ.க.வினை குறை சொல்கிறார்கள். ஆனால் அக்கட்சி மதவாத கட்சி அல்ல. சிறுபான்மையினரை பாதிக்கும் எந்தவித முடிவினையும் ம.தி.மு.க. எடுக்காது.  இனி எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் எந்தவிதத்திலும் கூட்டணி வைத்து  கொள்ள மாட்டோம் என அண்ணா பிறந்த மண்ணில் உறுதியுடன் கூறுகிறேன்’’என்று பேசினார்.

ad

ad