புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2014

ஆசிரியரை செருப்பால் அடித்த, பெண் தலைமை ஆசிரியரியை சஸ்பெண்ட்

தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த, எஸ்.பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கலையரசன் (52) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில், எஸ்.பட்டியை சேர்ந்த செல்வராணி (50)
தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த, 6ம் தேதி, வருகை பதிவேடு ஏன் குறிக்கவில்லை, எனக்கேட்டு, பள்ளி தலைமை ஆசிரியர், தன்னை தகாத வார்த்தையால் திட்டியதாகவும், செருப்பால் அடித்ததாகவும், கலையரசன், அரூர் போலீஸில் புகார் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து ஆசிரியர் கலையரசன் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடமும் புகார் தெரிவித்தார்.
அதே நேரத்தில், "மாணவர்களின் விடைத்தாள்களை சரியாக திருத்தாதது குறித்து நான் விளக்கம் கேட்ட போது, கலையரசன் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்'  என்று, தலைமை ஆசிரியர் செல்வராணியும், அரூர் போலீஸில் புகார் கொடுத்தார்.
அரூர் போலீஸார், இது குறித்து விசாரித்து, தலைமையாசிரியர் செல்வராணி மீது, புதன்கிழமை இரவு, வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சாமிநாதன், தலைமை ஆசிரியர் செல்வராணியை, வியாழக்கிழமை “சஸ்பெண்ட்” செய்து உத்தரவிட்டார்.

ad

ad