புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2014

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் இன்று தோண்டப்பட்டது! மேலும் மனித எச்சங்கள் மீட்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி மீண்டும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிவான் முன்னிலையில் தோண்டப்பட்டுள்ளது.9 வது தடவையாக நேற்று முன்தினம் சனிக்கிழமை மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்ட போது மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. “மன்னார் நீதிவான் ஆனந்தி
கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் காலை 11 மணிவரை குறித்த மனித புதைகுழி மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண ஆகியோர் முன்னிலையில் தோண்டப்பட்டது.
இதன்போது 3 மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் சனிக்கிழமை வரை 40 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணிமுதல் மதியம் 1 மணி வரை குறித்த மனித புதை குழி மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் மீண்டும் தோண்டப்பட்டது.
இதன்போது ஏற்கனவே தோண்டப்பட்ட பகுதியில் இருந்து குறித்த வீதி முழுமையாக உடைக்கப்பட்டு, மனித புதை குழி விஸ்தரிக்கப்பட்டு மேலும் தோண்டப்பட்டது.
இதன்போது குறித்த மனித புதை குழியில் இருந்து புதிதாக மேலும் மனித எச்சங்கள் பல உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீதி போக்குவரத்திற்காக மூடப்பட்டு தற்போது பொலிஸ் பாதுகாப்புடன் தோண்டப்பட்டு வருகின்றது. மீண்டும் நாளை செவ்வாய்க்கிழமை குறித்த புதை குழி மன்னார் நீதிவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad