புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2014

நில அபகரிப்பு மாநாட்டில் பங்கேற்க த.தே.கூ,மற்றும் த.தே.ம.மு குழு லண்டன் விஜயம் கூட்டமைப்பினரின் கருத்துக்கள்.
பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடில் நில அபகரிப்புக்கெதிரான மாபெரும் மாநாட்டில் கலந்து கொள்ள தாயகத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளனர்
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறீதரன், பா.அரியநேத்திரன்,சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் வழங்கிய கருத்துக்கள் பின்வருமாறு.
நில அபகரிப்பு மாநாட்டில் பங்கேற்க த.தே.ம.மு மற்றும் த.தே.கூ குழு லண்டன் விஜயம் 
பிரித்தானிய தமிழ் அவையின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் லண்டன் சென்றுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன் மற்றும் பா.அரியனேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் லண்டன் சென்றுள்ளனர்.
கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் இந்த மாநாட்டிற்கு செல்லவுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் விசா அனுமதி கிடைக்கவில்லை.
பெரும்பாலும் இன்னும் ஓரிரு தினங்களில் அவர்களும் லண்டன் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட கிழக்கு மாகாணத்தில் யுத்ததின் பின் ஏற்பட்டிருக்கும் காணி அபகரிப்புக்கள், சுவீகரிப்பு உள்ளிட்ட ஏனைய காணிசார் பிரச்சினைகள் சம்மந்தமாக சர்வதேச சமூகத்திற்கு ஜெனிவா மாநாட்டை முன்னிட்டு விளக்கும் முகமாக காணி மாநாடொன்றை பிரித்தானிய தமிழ் அவை ஏற்பாடு செய்துள்ளது.

ad

ad