புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2014

தமிழர்களுடைய போராட்டத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் பங்களிப்பு அளப்பரியது: மாவை முழக்கம்
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் அகதிகளாக உள்ள எம் மக்களுக்கும் சுவிட்சர்லாந்து நாட்டின் பங்களிப்பு அளப்பரியது என சுவிட்சலாந்து பாசல் செந்தமிழ்ச் சோலை நிகழ்வில் மாவை சேனாதிராஜா எம்.பி தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து பாசல் மாநிலத்தில் செந்தமிழ்ச் சோலை முத்தமிழ் விழா நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றதுடன் இந்நிகழ்வில் தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் நாயகமுமாகிய மாவை சேனாதிராஜா சிறப்பு விருத்தினராக கலந்து கொண்டதுடன் நடப்பு நாட்களின் நிலமைகளை தெளிவு படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad