புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


தேமுதிக, காங்கிரஸ் உடன் கூட்டணிக்கான அறிகுறியோ, சூழ்நிலையோ இல்லை : கலைஞர் பேட்டி
திமுக மாநாட்டுப் பணிகளைப் பார்வையிடவும், மாநாட்டில் பங்கேற்கவும் அக்கட்சித் தலைவர் கலைஞர் இன்று 13.2.2014 வியாழக்கிழமை மாலை திருச்சி புறப்பட்டார்.  புறப்படுவதற்கு முன் அவர் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார்.



அப்போது அவர்,  ‘’திருச்சி மாநில மாநாடு இந்திய துணைக் கண்டத்தையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அமையும்.  திருச்சி மாநாடு திமுகவிற்கு திருப்புமுனையாக அமையும்’’ என்று திமுக மாநாடு குறித்து தெரிவித்தார்.  
மக்களவை கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர்,  ‘’தேமுதிக, காங்கிரஸ் உடன் கூட்ட ணிக்கான அறிகுறியோ, சூழ்நிலையோ இல்லை. கூட்டணியை பொறுத்தவரை எடுத்தமுடிவை ஒற்றுமை யுடன் செயல்படுத்துவோம்’’ என்று தெரிவித்தார்.
தமிழக அரசின் 2014 -2015 ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து அவர்,  ‘’தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களை தாக்கியுள்ள பட்ஜெட்’’ என்று கருத்து தெரிவித்தார்.

ad

ad