அம்மா உணவகங்களுக்கு சப்பாத்தி செய்யும் மிஷின் ஒப்பந்தம் ரத்து
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து மேயர் சைதை துரைசாமி பேசியபோது, ’’அம்மா உணவகங்களில் விரைவில் சப்பாத்தி வினியோகம் தொடங்க வேண்டியதின்
ஒப்பந்தக்காரர் ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்டபடி, சென்னை மாநகராட்சிக்கு எந்திரங்களை வழங்காததால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழங்கப்பட்ட பட்டித்தொகை முழுவதையும் 90 நாட்களுக்குள் திரும்ப செலுத்துவதாக அவர் உறுதி அளித்து உள்ளார்.
இந்த குறைபாட்டை போக்க, ஒரு அம்மா உணவகத்திற்கு 12 மகளிர் குழு உறுப்பினர்கள் வீதம் சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு, சப்பாத்திகள் தயார் செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது’’என்று தெரிவித்தார்.