புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

மாணவிக்கு செக்ஸ் கொடுமை: சித்தப்பா கைது
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சந்தியா (வயது 17 ). இவர் கோவை அவினாசி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.



இந்நிலையில் சந்தியாவின் தந்தைக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் குடும்பத்திற்கு தெரிய வந்ததும் சந்தியாவின் தந்தை கள்ளக் காதலியுடன் மனைவியையும், குழந்தை களையும் தவிக்கவிட்டு ஓடிவிட்டார்.
இதன் காரணமாக சந்தியாவின் தாய் குடும்பம் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டார். சரியான வருமானமின்றி தவித்து வந்த அவரால் சந்தியாவை படிக்க வைக்க முடியவில்லை. இதுகுறித்து உறவினர்களிடம் கூறிய அவர் மகள் சந்தியாவின் படிப்பை நிறுத்துவதாக கூறினார். இதையறிந்த சந்தியாவின் சித்தப்பா அற்புதராஜ் சந்தியாவை படிக்க வைப்பதாக அவரது தாயிடம் ஆறுதல் கூறினார்.
இதையடுத்து சந்தியா ஆவாரம்பாளையத்தில் உள்ள பாட்டியின் வீட்டிற்கு சென்று தங்கினார். அங்குதான் சந்தியாவின் சித்தப்பா அற்புதராஜூம் வசித்து வருகிறார். தினமும் சந்தியா பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார். அப்போது அற்புதராஜ் தனது பைக்கில் சந்தியாவை பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறினார்.
படிக்க வைக்கும் சித்தப்பா அழைக்கிறார் என்ற நம்பிக்கையில் அவருடன் பைக்கில் பள்ளிக்கு செல்ல சந்தியா ஆரம்பித்தார். சில நாட்களில் அற்புதராஜ் தனது சுயரூபத்தை காண்பிக்க ஆரம்பித்தார். பள்ளிக்கு செல்லும் போது சந்தியாவிடம் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களின் அழகை ஆபாசமாக வர்ணித்து தனது செக்ஸ் ஆசையை மறைமுகமாக சந்தியாவிடம் தெரிவித்தார்.
இதையறிந்த சந்தியா அற்புதராஜூடன் பைக்கில் செல்வதை தவிர்க்க ஆரம்பித்தார். இந்நிலையில் விட்டில் தனியாக இருந்த சந்தியாவிடம் அற்புத ராஜ் செக்ஸ் சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா சித்தப்பா அற்புதராஜை எச்சரித்தார். ஆனாலும் அற்புதராஜின் செக்ஸ் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் சந்தியா மட்டும் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அற்புதராஜ் சந்தியாவை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். சந்தியா அவரிடம் இருந்து தப்பித்து வீட்டைவிட்டு வெளியே ஓடி தப்பித்தார். அங்கிருந்து தாய் வீட்டுக்கு சென்ற சந்தியா அழுது கொண்டே நடந்த சம்பவங்ளை தாயிடம் கூறினார்.
இதுகுறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இந்த வழக்கை கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். அவர்கள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி அற்புதராஜை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ad

ad