புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்:புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 29பேர் சிறைபிடிப்பு
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் தளத்தில் இருந்து நேற்று புதன்கிழமை 199 விசைப் படகுகளில் சுமார் 800 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ராஜேந்திரன்(46), மனோகரன்(25), துரை(40), பன்னீர்(35) ஆகிய 4 மீனவர்களும், மோகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மோகன்(35), தேவதாஸ்(35), பரசுராமன்(38), குமார்(40) ஆகிய 4 மீனவர்களும் கடற்கரையில் இருந்து 12 கடல்மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துச் கொண்டிருந்தனர்.  

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் சிறைபிடித்துததுடன், அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.


 இன்று 13 ந் தேதி முதல் தமிழகத்தின் 6 மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் இலங்கை கடற்படையினர் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்துச் சென்ற சம்பவம் மீனவரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad