புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2014


பங்களாதே'{டனான ஒருநாள் தொடரும் முழுமையாக இலங்கை வசம்

பங்காளாதேஷ¤டனான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியிலும் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 3- 0 என முழுமையாக கைப்பற்றிக்கொண்டது.
மிர்புரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாட
பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது. முனைம் ஹக் 60 ஓட்டங்களை குவித்தார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணிக்கு திரும்பிய தம்மிக்க பிரசாத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
தொடர்ந்து பதிலெடுத்தாடிய இலங்கை அணிக்கு குசல் பெரேரா கைகொடுத்தார். அபாரமாக ஆடிய அவர் தனது கன்னி சதத்தை பெற்றார். 124 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 6 பெளண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 106 ஓட்டங்களை பெற்றார்.
இதன்போது அவர் 3 ஆவது விக்கெட்டுக்காக தினேஷ் சந்திமாலுடன் ஜோடி சேர்ந்து 138 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றார். இதன்மூலம் இலங்கை அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. போட்டியில் ஆட்ட நாயகன் விருது குசல் பெரேராவுக்கு கிடைத்ததோடு தொடர் நாயகன் விருதை சச்சித்ர சேனாநாயக்க வென்றார். ஏற்கனவே இலங்கை பங்களாதேஷ¤டனான டெஸ்ட் மற்றும் இருபது-20 தொடர்களையும் வென்றது.

ad

ad