போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் :சென்னை கல்லூரி மாணவர்கள் 31 பேர் இடைநீக்கம்
போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய புகாரில், சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் 31 பேரை, இன்று முதல் 10 நாட்கள் மட்டும் இடைநீக்கம் செய்து, கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 28&ந் தேதி அன்று, கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டு, போலீசார் மீதும், அவர்களது வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தையட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.