புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2014

டாஸ்மாக் மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம்! சசிபெருமாள் உள்பட 4 பேர் கைது!
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் காந்தியவாதி சசிபெருமாள், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
கடந்த 31-ந்தேதி சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய அவர் புதன்கிழமை காலை அம்பத்தூர் வந்தார்.

அம்பத்தூரில் மேனாம்பேடு கருக்கு பகுதியில் பள்ளி-கல்லூரி மற்றும் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடை முன்பாக அவர் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அவருடன் 20 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் பூரண மதுவிலக்கு கோரி கோஷம் போட்டனர். பின்னர் காந்திவாதி சசிபெருமாள் பூரண மதுவிலக்கு கோரிக்கை பற்றி பேசினார். சம்பவ இடத்துக்கு வந்த அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர் மற்றும் போலீசார் முறையான அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சசிபெருமாள், ரவிசந்திரராஜா, செல்வம், கணேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

ad

ad