புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014



அமெரிக்காவில் அழுத இந்திய தமிழ் குழந்தையை பணிப்பெண், தரையில் வீசி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (33) அவரது மனைவி தேன்மொழி (24). தமிழகத்தைச் சேர்ந்த இவர்களது 19 மாத குழந்தை ஆதியன்.
பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், கிஞ்ஜல் படேல் (27) என்ற பெண்ணை குழந்தையை
கவனித்துக்கொள்ள அமர்த்தி இருந்தனர். அவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான்.
வீட்டில் குழந்தையை கவனித்துக்கொண்டிருந்த கிஞ்ஜல் படேல் கடந்த 16ம் திகதி, குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் ஆத்திரமடைந்தார். அடித்து பார்த்தார். மேலும் அழவே குழந்தையை தரையில் வேகமாக வீசியுள்ளார்.
இதில் குழந்தையின் தலை தரையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் குழந்தை வீரிட்டு அழுதது. தலையில் இருந்து ரத்தம் வழியவே, பயந்து போன படேல், சிவகுமாருக்கு போன் மூலம் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்த சிவகுமார், குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
இந்த வழக்கில் கிஞ்ஜல் படேலை பொலிசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில் குழந்தையை தரையில் வீசி தாக்கியதை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் தேன்மொழி, சிவக்குமார் ஆகிய இருவரையும் பொலிசார் இந்த வழக்கில் கைது செய்தனர். குழந்தைக்கு பலத்த காயம் ஏற்படும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ad

ad