புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


தி.மு.க-வின் நாடகங்கள்..!

      திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த நாட்களில் அக்கட்சி  சினிமா, நாடகம் போன்ற கலைத்துறையை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தது.

       மற்ற கட்சிகளை விட அன்றுமுதல் இன்றுவரை கலைத்துறையினர் அதிகம் உள்ளக் கட்சியும் தி.மு.க-தான்.   அன்று எம்.ஜி.ஆர்,,எஸ்.எஸ்.ஆர். எம்.ஆர்.ராதா  என்று ஒரு பட்டாளம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்கள்.


             இன்று குஸ்பு, சந்திரசேகர், நெப்போலியன்,ரித்திஸ் என்று பலர்  இருகிறார்கள். அவ்வளவு ஏன்?  தி.மு.க-வின் தலைவர் கலைஞரே  திரைத் துறையை சேர்ந்தவர்தான்.!

         அதனால்தானோ, என்னவோ,அன்றுமுதல் இன்றுவரை அரசியலில் அவர் போடும் வேடங்களும் பேசும் வசனங்களும் நேரத்துக்கு தகுந்தபடியும் அவர் ஏற்றுகொண்ட  பாத்திரத்திற்கு தக்கபடியும் இருப்பதை கூர்ந்து நோக்கும் எவரும் அறிய இயலும்.

         ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது, காங்கிரசின் உறவில் திளைத்து இருந்த கலைஞர், அப்போதுஅவர்களுக்காக அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.!


            நாற்பது எம்பிக்கள் இவரது கட்டுபாட்டில் இருந்தும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று மத்திய அரசை மிரட்டவில்லை.போரை நிறுத்த முயற்சிகள் எடுக்கவில்லை. மூன்றுமணிநேரம் அன்ன சமாதியில் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தினார்.!

         தனது மகளும் குடும்பமும் 2-ஜி ஊழலில் சிக்கிக்கொண்டபோது  காங்கிரசை  மிரட்டியும் பயனில்லாமல் போனதால், ஆட்சியில் இருந்து வாபஸ் பெற்றார்.இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்து செத்துப்போன டெசோ அமைப்பை தொடங்கினார்.!

          தனது மகள் கனிமொழியை ராஜ்ஜிய சபை உறுப்பினர் ஆக்க அதே காங்கிரசின் தயவு தேவைப்பட்டதால்,மீண்டும் நேசக்கரம் நீட்டினார்.
இப்பொது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழர் நலம்,இலங்கை பிரசனை,மீனவர்கள் படுகொலை என்று ஒருபுறம் நாடகம் நடத்துகிறது.

         மறுபுறம், காங்கிரசோடு கூட்டணி வைக்க சோனியாவை சந்திக்க  தனது மகள் கனிமொழியை அனுப்புகிறார். ராகுலை சந்திக்க தோல்.திருமாவை அனுப்புகிறார்.!

         பார்த்தாயா தி.மு.க-வின் பலத்தை என்று காட்ட திருச்சியில் பலகோடிகளை  கொட்டி,மாநாடு நடத்துகிறார்.

           அன்று துண்டேந்தி பிச்சை எடுத்து தமிழர்களைக் காப்பாற்ற கட்சியை நடத்துவதாக சொன்ன தி.மு.க-வால் இன்றுகோடிகளை அனாவசியமாக செலவு செய்து மாநாடு நடத்த முடிகிறது. !

       இந்தப்பணம் எப்படி வந்தது? என்பது ஒருபுறம் இருக்க..
 தி.மு.க. வளர்ந்த அளவுக்கு தி.மு.க-வால் தமிழர்கள், திராவிடர்கள் வளர்ந்து உள்ளார்களா?என்ற கேள்வி எழுகிறது.!


           இன்றும் கையறுநிலையில்,வறுமையின் பிடியில் இலட்சக்கணக்கான தி.மு.க.தொண்டர்கள்,அப்பாவி தமிழர்கள் இருப்பதை காணும்போது, தி.மு.க யாரை வளர்த்துள்ளது என்ற கேள்வி எழுகிறது.!
       
                     கண்ணதாசன் சொல்வார்: 
."நாடகங்கள் ஆடுமாறு நாயகன்தன் கட்டளை
நாடகம் என்னும் பேரில் நடப்பதுதான் எத்தனை?"

"அன்பு ஒன்று செய்யுமாறு அண்ணலிட்ட கட்டளை
அன்பு என்னும் வாள்கொண்டு ஆளறுபோர் எத்தனை ?"

-    இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ,நிச்சயம் கலைஞருக்கு பொருந்தும்!

        சுயநலமும், சந்தர்ப்பவாதமும்,அடுக்குமொழி பேச்சும், தந்திரமும் அரசியல் சாணக்கியமாக தெரியலாம். ஆனால்,இவைகளால் யாருக்கு என்ன பயன்? சிந்திக்க வேண்டிய நேரம் இது.

ad

ad