புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

சென்னை ஐ.சி.எப்.பில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐ.சி.எப். அம்பேத்கர்நகரைச் சேர்ந்த சேரன் மகன் விக்னேஷ்குமார் (23). இவர் மாநிலக் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விக்னேஷ்குமாருக்கு மது அதிகமாக அருந்தும்
பழக்கம் உண்டாம். இதனால் கல்லூரிக்கு கூட அவர் சரியாக செல்வது கிடையாதாம்.மேலும் அண்மைகாலமாக அவர் கல்லூரிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷ்குமார் பெற்றோர், அவரை கண்டித்தனராம். இதன் விளைவாக விரக்தியடைந்த விக்னேஷ்குமார் திங்கள்கிழமை விஷம் குடித்தார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். விக்னேஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஐ.சி.எப். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad