புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014

எந்தெந்த தொகுதியில் போட்டி: தா.பாண்டியன் பேட்டி
திருவாரூரில் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு வந்த அக்கட் சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
அவர் பேசுகையில்,
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்ந்துள்ள அணி பொதுத்துறையை பலப்படுத்த வலியுறுத்தும். நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும், மக்கள் நலம் நாடும் அரசும் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும்.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, திருவாரூர் கோடியக்கரை அகல ரயில் பாதைப் பணியை விரைந்து தொடங்க வேண்டும். திருவாரூரிலிருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவை தொடங்க வேண்டும். மேற்கூறியக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சிபிஐ சார்பில் விரைவில் மறியல் போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசு அரிசிக்கு விதிக்கும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறது என்ற கேள்விக்கு,
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதி குறித்து இன்னும் பேசவில்லை என்றார்

ad

ad