புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2014

சம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்சி!

ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி-எழுதுகிறது அரச ஊடகம் ஒன்று 

பாராளுமன்ற கூட்டங்களின் போதும் கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக ளின் தலைவர்கள் சந்திப்பின் போதும், சம்பந்தனுக்கும், மாவைக்கும் இடையே அடிக்கடி கருத்து முரண் பாடுகள், மோதல்கள் வருவதுண்டு.

அப்போதெல்லாம் மாவை, நான் உங்களோட நிறைய பேசவேணும், இதில் பேச விரும்பவில்லை என்று சொல்லிக் கொண்டே வந்தார். மாவையின் இந்த பேச்சின் அர்த்தம், அதன் உள்நோக்கம் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் ஏனையவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மாவை மட்டும் ஒரே ஒரு வாய்ப்புக்காக ஏறத்தாழ ஆறு மாதங்களாக காத்திருந்தார். அப்படி என்ன வாய்ப்பு? அது தான் கடந்த 26.01.2014 அன்று கூடிய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவின் சந்திப்பு!
சந்திப்பு தொடங்கியதும் நீறுபூத்து நீத்துப்போக விடாமல், ஏறத்தாழ ஆறு மாதங்களாக பார்த்துப் பார்த்து தகதகவென தகிக்க வைத்துக்கொண்டிருந்த மாவையின் கோபத்தீ, முகடுடைத்து குமுறி கொப்பளித்தது. அந்த நீதித்தீயின் கொப்பளிப்பிலிருந்து சூடு ஆறாத சில பல சிதறல்கள்! இதோ.
முதலமைச்சர் வேட்பாளராக நிற்க எனக்கு தகுதி இல்லை என்று சொல்லி யார் முடிவெடுத்தது. இது ஒரு சிலர் மட்டும் எடுத்த முடிவு. மற்ற கட்சிகள் எல்லாமே எனக்கு முழு ஆதரவு தெரிவிச்சது. அவர்கள் எனக்கு ஒருபோதும் இடைஞ்சலா, எதிரா நிற்கேல்ல.
18 வயசில இருந்து இளைஞர் அணி, அப்படி இப்படி என்று சொல்லி 43 வருசமா கட்சிக்காக பாடுபட்டிருக்கிறன்.
சிறைக்கு போய் வந்திருக்கிறன். எனக்கு தகுதி இல்லை. என்னில் நம்பிக்கை இல்லை என்று சொன்னா பிறகு ஏன் நான் கட்சியில் இருப்பான்? இன்றைக்கு கூட்டியிருக்கிற இந்த கூட்டத்த அன்றைக்கு கூட்டி முடிவெடுத்திருக்க வேண்டும்.
ஒரு சிலர் மட்டும் தனிச்சு முடிவெடுக் கிறதெண்டால், பிறகு என்னத்துக்கு இந்த கட்சி, மத்தியகுழு எல்லாம். கலைத்து விட்டுப் போங்கோ.
நான் என்ற பதவியை றிசைன் பண்றன் என்று குமுறி வெடித்து, மாவை தனது இருக்கையை விட்டு எழும்பி வெளியே செல்ல ஆயத்தமாக, உடனே மற்ற உறுப்பினர்கள் அவரது கையை இழுத்துப் பிடித்து வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி, தோளில் தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தி அமர வைத்தனர்.
பின்னர், மாவையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து எல்லோரும் தமது ஆதங்கங்களை, விமர்சனங்களை கொட்டித் தீர்த்துகொண் டிருந்தனர். இப்படியே ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்த பேச்சுக்களும், ஏச்சுக்களும் அப்படியே கிழக்கு மாகாணம் நோக்கி நகர்ந்து விட்டது.

ad

ad