புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014


தேமுதிக எந்த முடிவு எடுத்தாலும் கவலையில்லை? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

மதுரையில் பா.ஜனதாவின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,


சென்னையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அந்த மேடையில் கூட்டணியில் பங்கேற்க கூடிய கட்சியின் தலைவர்களை கலந்து கொள்ளச் செய்வதற்காகவே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம். கடந்த 7ந் தேதிக்கு பின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்த நேரமில்லை. காரணம் பிதரமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவதில் கவனம் செலுத்தினோம் என்றார்.
பா.ஜனதாவுடன் தே.மு.தி.க. கூட்டணியா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,
ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது பற்றியும், கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது பற்றியும் அந்த கட்சி தலைவர் முடிவெடுக்க உரிமை உண்டு. அதில் மற்றவர்கள் தலையிட முடியாது. அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் கவலையில்லை. இவ்வாறு கூறினார்.

ad

ad